ஒளியில் நிழல் மலர்கிறது
இருளில் நிழல் உதிர்கிறது
உயிர்
எங்கு மலர்கிறது?
எங்கு உதிர்கிறது?
யாருக்கும் தெரியா
அந்த வேற்று உலகம்
மிக அருகில் தான் உள்ளதா?
நட்சத்திரங்களைக் கடந்து உள்ளதா?
ஒளியிற்கும் இருளிற்கும் இடையிலா?
ஒளியும் இருளும் அதனுள்ளா?
அந்தப் பெருங் கனவுலகு
இந்தச் சிறு கனவில்
மலரும் முன்பே உதிர்ந்து
நிழல் மலர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக