வியாழன், 14 அக்டோபர், 2021

 


வறுமையை கண்டித்தால் கூட
மகிழ்ச்சி தான்
கண்டுகொள்ளாமல் இருப்பதால தான்
கள்வர் என்று சொல்கின்றேன்

சாலைவாழ் மக்களைச் சந்திகாதவன் தான்
மேலைநாட்டுத் தலைவரை எல்லாம்
கூனிக் கும்பிடு போட்டுவரப் போகிறான்

கோட்டுச் சூட்டுக் காரனுக்கு
ஓட்டை ஒட்டு உடுத்துவோனின்
இன்னல்கள் தெரியாது
இனிமேலும் புரியாது

வானொலியில் பேசுகிறான்
வான்வெளியில் திரிகின்றான்
நேர்வழியில் வந்துனை பார்க்காதவன்
வறுமை வலியை ஏதுணர்வான்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக