வியாழன், 30 ஏப்ரல், 2020

கல்லான மனிதர்கள்
கல்லாத மனிதர்கள்
கல்லுக்குப்  பாலூட்டும்
பகட்டான மனிதர்கள்

பகிராத மனிதர்கள்
பரிகாரம் செய்கிறார்
அரிதார மனிதர்கள்
அர்ச்சனை செய்கிறார்

செல்லாத காசையும்
வீசியெறிந்த தோசையும்
பைத்தியங்கள் உண்கிறார்
பங்குபோட்டுக் கொள்கிறார்

தெருநாய் என்றபோதிலும்
சமமாய்த் தின்ற யோகியை
கடந்தோடிடும் நாழிகை
கடவுள் தூவும் அர்ச்சதை

பைத்தியங்கள் தான் வாழ்கிறார்
மற்ற யாவருமே பிழைக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக