பகிர்ந்துகொள்ள முடியாத
ஒருவருடைய வார்த்தைகளே
பலப் பால்வெளிகள்...
எண்ணக் குதிரைகளின்
ஓட்டத்தின் வல்லமை
ஒளியினை விஞ்சியதோ...
அது பற்ப்பல பால்வெளித் திரள்களை
ஒரு பாய்ச்சலில் கடந்திடுமோ
பேராற்றல் தான் வார்த்தையில் அடங்கிடுமோ...
பேராற்றலின் பிறப்பிடம்
காதலை அறிவது
மானிட மடமையன்றோ
என் தேவியே
நீ இன்றி நான் இங்கு
உன் கனவினில் வரும் கனவோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக