திங்கள், 20 ஏப்ரல், 2020

கண்களுக்கு எட்டும் வரை
வரையும் ஓவியம்
யாருடையதோ...

நாள்தோறும் வரைந்து கொண்டே
யாரும் பார்க்காத வண்ணம்
ஓவியத்துள் ஒளிகிறாயோ

இமைத் தூரிகைகள்
ஒன்று சேர்ந்து
மனதின் உள்ளே
வரையும் ஓவியம் போல்

வெளி எல்லாம் வரையும்
அந்த இமைகள்
யாருடையதோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக