விதைக்குள் இருக்கும் கடவுள்
தன்னில் இடம் கொடுத்து
தன்னையே இழக்கிறாரா?
தன்னையே வளர்க்கிறாரா?
பார்க்கும் இடமெல்லாம் பச்சை
உயிர்கள் உண்ண பழங்கள்
நின்று செல்ல நிழல்கள்
வேர்களுக்கு கிளைகளுக்கு
இலைகளுக்கு மலர்களுக்கு
காய் கனிகளுக்கு
அணிலுக்கு தேனீக்கு
சிறுவர்க்கு சிறகுக்கு
தும்பிக்கு தூசுக்கு
வெயிலுக்கு மழைக்கு
காற்றுக்கு வெற்றுக்கு
கனவுக்கு கவிதைக்கு...
தன்னில் இடம் கொடுத்து
தன்னையே இழக்கிறாரா?
தன்னையே வளர்க்கிறாரா?
விதைக்குள் இருக்கும் கடவுள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக