எல்லோர் மனங்களிலும் ஒரு ஓவியன் இருக்கிறான்
கண்களில் தெரிவதை எல்லாம்
அவன் மாற்றி மாற்றி வரைகிறான்
கண்கள் மூடி இருக்கையில்
அவன் கனவை வரைகிறான்
கண் இல்லாதவர்களுக்கு வாழ்வே கனவு
கனவோ... நனவோ...
எல்லாமும் எல்லாமும்
அழியப்போகும் ஓவியங்களே
அதுவரை அதுவரை
ரசித்துக் காணுவோமே
நாமும் ஓவியமே...