வியாழன், 1 ஆகஸ்ட், 2024


பூமியை
நேசித்து வாழ
முயலுக்குத் தெரிந்திருக்கிறது

முயலை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

வானை
நேசித்து வாழ
பறவைக்குத் தெரிந்திருக்கிறது

பறவையை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

தன்னைத்தானே
கூண்டிலடைத்து வாழவும்
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

பூமியை, வானை
கூண்டிலிருந்து தான்
தானும் பார்த்து வாழ்கிறான்

பாவம் மனிதன்
நேசம் கொள்வதாய்
மகிழ்ச்சி கொள்வதாய்
நடித்து வாழ்கிறான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக