பூமியை
நேசித்து வாழ
முயலுக்குத் தெரிந்திருக்கிறது
முயலை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
வானை
நேசித்து வாழ
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
பறவையை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
தன்னைத்தானே
கூண்டிலடைத்து வாழவும்
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
பூமியை, வானை
கூண்டிலிருந்து தான்
தானும் பார்த்து வாழ்கிறான்
பாவம் மனிதன்
நேசம் கொள்வதாய்
மகிழ்ச்சி கொள்வதாய்
நடித்து வாழ்கிறான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக