படம் சொல்லும் கருத்தை புரியாதது போல் மிளிரல், புரிந்தது போல் உளறல்...
படம் பார்த்துவிட்டு மற்றும் பார்க்காமல்...
தன் ஜாதியை உயர்த்திப் பிடித்து,
பிறர் ஜாதியை தரம் குறைத்து...
என்று ஏகமாக விமர்சனங்கள் வந்தவாரே உள்ளன.
மண்ணும் மக்களாகிய நாமும் மாசடைந்திருப்பதை இந்த போக்குகள் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
ஆம் படம் சரியாகத் தன் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது என்பதை இதன் வழி உணர முடிகிறது.
அன்று பொன் பொருளுக்காக,
இன்று மென் பொருளுக்காக...
அன்றும் கூலி,
இன்றும் கூலி...
இன்னும்
அரசன் அயலான்,
அடிமை தங்கலான்...
"பிறந்த மண் உயிர்களைக் காக்க வேண்டும்.
உயிர்கள் பிறந்த மண்ணைப் பொன்னாகப் போற்றிக் காத்துக் கொண்டாடிட வேண்டும்.
பிறந்த மண்ணில் உயிர்கள் அனைத்தும் கூடி வாழ வேண்டும், பகிர்ந்து வாழ வேண்டும்.
பேதங்களைத் தவிர்த்திட வேண்டும்.
வறியவர், செல்வந்தர் அனைவருக்கும் நல்ல கல்வி வேண்டும்.
அந்தக் கல்வி உலகைச் செதுக்க வேண்டாம், உள்ளம் செதுக்க வேண்டும்.
நல்ல கல்வி சுயசார்பு வாழ்வைத் தர வேண்டும்.
அன்னியரை சார்ந்து வாழாமல் இருந்திட வேண்டும்.
மண்ணும், உயிர்களும் சுரண்டப் படாமல் இருந்திட வேண்டும்.
மாசற்ற ஆதி மனதை, அந்தப் புனித வெளியைத் திரும்பப் பெற வேண்டும்..."
என்று திரை மொழியில் சொன்ன தங்கலான் திரைப்படக் குழுவிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
சமூகப் பொறுப்போடு உள்ள வெகு சில திரைப்படக் குழுக்களிள் பா.ரஞ்சித்தின் குழு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சி.
ஒன்று சொல்வேன், அதை உரக்கச் சொல்வேன் "அம்பேத்கரும், புத்தமும் இங்கு நம் அனைவருக்குமாகவே தேவையுள்ளது".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக