ஒளி எங்கே பிறந்தது
இருள்தானே கருவறை
இறு பொருமை காத்திடு
உன் இருமை வென்றிடு
இனி நாளை மட்டுமில்லை
நாளெல்லாம் உன் நாளே
உனக்கு மட்டும் இல்லை
விடியல் உலகிற்கே உன்னாலே...
காற்றின் சம்மதம்
நான் கேட்டதில்லையே
என்னுள் பூட்டும் வேளையும்
என் உயிரைக் கூட்டுதே...
ஏதும் செய்யா திரியை
எரிய செய்த போதும்
என்னைச் சுற்றி ஏனோ
ஒளியை நல்குதே
நானும் அதுபோல் மாற
என்னும் வேளையில்
சுயநலம் என்னைச் சுற்றி
சூறையாடுதே!
என்னுள் ஏதோ ஒன்றை
நான் தேடும் வேளையில்
என்னைத் தொலைந்து நின்றேன்
இந்த வேள்வியில்...
துன்பம் இன்பம் இனியில்லை
இரவும் பகலும் இல்லை
எல்லாம் ஒன்றாயான தன்மை
இது சித்தர் சொன்ன உண்மை
அமைதி தொடருதே
தன்னலம் மாறுதே
பறவைகள் ஆன பின்னே
வானில் தடைகள் இல்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக