ஆயுள் முழுவதும்
பலூன் விற்றவருக்கு
லேசான வாழ்வில்லை...
கடவுள் ஊதிய
பலூன்களாகவே
அவர் அனைவரையும் காண்கிறார்...
பூமியையும், சூரியனையும் கூட
அவர் அவ்வாறே
தன் கனவில் பார்க்கிறார்...
பலூன் வெடித்து
அழும் சிறுவர்களை
அவர் சலனமில்லாமலே காண்கிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக