திங்கள், 5 ஆகஸ்ட், 2024


என்னைப் பார்த்து வளர்த்த மரங்கள்
வளர்ந்து வெகுநாள் கழித்து
திரும்பச் சென்று காண்கையிலே
நிழலால் என்னை அணைத்து
தென்றல் முத்தம் தருகின்றன

எத்தனை எத்தனை மாற்றங்கள்
இவ்வுலகில் நிகழ்ந்தும்
இன்னும் மாறாமல் இருக்கின்றன
பல உயிர்கள் வாழ
வாடகை இல்லாமல் இடம் அளிக்கின்றன

ணிலாய், பறவையாய் மாறி
உன்னில் நான் தங்கி
வாழத் தோன்றுகிறது
என் அன்பு மரங்களே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக