நடுநடுவே
நான் காணாமல் போவதாக
நீ சொல்கிறாய்
உன்னைப் பார்த்த
நாள் முதலே
நான் காணவில்லை
நடுநடுவே
எனைக் காணும்போது
என் கைகளைப் பற்றிக்கொள்
என் காதில் ஏதேனும் சொல்
அது போதும்
மறந்தும் என்னிடம்
என்னைத் தந்துவிடாதே
தொலைந்து போகட்டும் விடு
இல்லை
தொட்டுக்கொண்டே இரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக