கண்ணீர் மட்டுமே
தொட்டு
முத்தமிட்டு
ஆறுதல் சொல்கிறது
எல்லாத் துன்பங்களிலும்
உடனிருந்து
இதய வேர்களின் வழியே
மீண்டும் கண்களில்
புன்னகையாய் பூக்கிறது
கண்ணீரை
நான் எப்படி
வெறுக்க முடியும்
மறுக்க முடியும்...
கடல் நீர்
காய்ந்த பிறகு
நிலம்
வெள்ளந்தியாய் சிரிக்கும்
அதனால்தான் அதனால்தான்
நிலம்
கடல் தாங்கி நிற்கும்
என் கண்ணீர்
என் கடல்
அலையலையாய்
நினைவுகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக