வியாழன், 4 ஏப்ரல், 2024


இரவு தோறும்
கடவுளின் பிரார்த்தனை
மனிதருக்காக

புதிதாய்
ஒரு காலையை
கடவுள் சிருஷ்டிக்கிறார்

பழைய பகல்களை
பாவ மூட்டைகளாய்
மனிதர் தோளில் சுமக்கிறார்

பகலெல்லாம்
மனிதரின் பிரார்த்தனை
தனக்காகவே

நாளையும் கடவுள்
மனிதருக்காக பிரார்த்தித்து
ஒரு புதிய காலையைப் படைப்பார்

மனிதரும்
தனக்காக தனக்காக என்று
பாவ மூட்டையே சுமப்பார்

கடவுள் தனக்காக
பிரார்த்திக்கும் ஒரு நாளில்
மனிதர் உறங்க முடியாது
காலை விடியாது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக