பரம் பொருளோ
பரம சிவனோ
பரம பிதாவோ
பிறை நிலாவோ
எத்தனை எத்தனைக் கடவுள்கள்
இருந்தும்
எதையும் நம்பாமல்தானே
இத்தனை இத்தனை ஏவுகணைகள்...
சொற்றுணை கொண்டு வேண்டுகிறோம்
தமிழே தாய் மொழியே
இயற்கையாய் வந்தணைத்த இறையே
மாயம் செய்
மண்ணில் மங்களம் செய்
போர் இலாத பாரிலே
உயிர்களை நிம்மதியாய் வாழச் செய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக