ஞாயிறு, 28 ஏப்ரல், 2024


தினமும் வந்துபோகும் பறவைகள்
அந்த நம்பிக்கையில் தான்
ஒவ்வொரு நாளும் கடக்கும்...

தானியங்களைத் தான் தருகிறேன்
மாறாக தானமாகத் தருகிறது
இந்த வாழ்வை...

ஒவ்வொரு தானியத்தோடும்
கொத்தி விழுங்குகிறது
உதிர்ந்து கொண்டிருக்கும் என் நினைவுகளை...

சிறகுகளை அடித்து
என் மனதின் இறுக்கங்களைத்
தளர்த்தி விடுகிறது

தூரத்துப் புள்ளியாக
மறையும் புள்ளினமே
எழுதிச் சென்றதைப் படித்துக் கொண்டிருப்பேன்
நீங்கள் மீண்டும் வரும்வரை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக