கணிப்பொறியில் மாட்டிக் கொண்ட
எலி மனிதர்கள்
வலைவலையாய்ப் பின்னி
உலகையும் பொறியாய் மாற்றுகிறார்
மனிதரை மனிதரே
இரையாய் ஆக்குகிறார்
நிஜ அனுபவங்களை எல்லாம்
நிழல் ஆக்குகிறார்
குளிரூட்டியில் கூடி
இரத்த வெப்பம் ஆற்றுகிறார்
இறந்த சடலங்களைப் போல்
ஜீல்லென வாழுகிறார்
அப்பாவி மனிதரை எல்லாம்
கொல்லெனக் கொல்லுகிறார்
கணிப்பொறி அடிமைகளே
நிஜக் கனவினைக் காணுங்களே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக