கவிஞன் கையில் கோடி கிடைத்தால்...
கோடானுகோடி வார்த்தைகளை போல
வாரி வாரி இறைத்து
விளையாடுவான்
சுமை என்று
தூக்கி எறிந்துவிட்டு போனவன்
திரும்பிவந்து இமைக்காமல் தேடுவான்
தப்புத் தப்பாக தாள் எண்ணி
சரியாக வேறு எதையோ
எண்ணிக் கொண்டிருப்பான்
கொடுத்துக் கொடுத்துப் பழகிய கையை
தயக்கம் இல்லாமல் ஏந்தி நிற்பான்
பிறர் கையென்று பிரித்துப் பார்க்கமாட்டான்
குழந்தைக்கு கொடுப்பான்
குரங்குக்கும் கொடுப்பான்
சாமிக்கு ஒருபோதும் கொடுக்கமாட்டான்
கனவுலோக கிரகவாசி
சகலம் இருந்தாலும் சன்யாசி
வெறுங்கை சுகவாசி
அந்தக் கவிஞன் கையில் கோடி கிடைத்தால்
பொதுவில் வைப்பான்
பூட்ட மாட்டான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக