கடவுள் மறுப்பாளன் தான் அவன்
அதுவும் கடவுளுக்காகவே செய்கிறான்
கேடுகெட்ட நம்மிடமிருந்து கடவுளைக் காப்பதற்கு
அவன் வேறென்ன செய்வான்...
செய்யும் பாவங்களுக்கெல்லாம்
கடவுளை சாட்சியாய் வைக்காதீர்கள்
என்பதே அவன் மறுப்பு
அதீத கடவுள் நம்பிக்கை
அதீத பாவ எண்ணிக்கை
போதும் போதும் கடவுளை விட்டுவிடுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக