திங்கள், 16 ஜனவரி, 2023


கூண்டுப் பறவைகளை எண்ணி
கண்ணீர் சிந்தும் வானம்
விதை தூவும் பறவை சொந்தங்கள்
நமக்கும் சேர்த்தே காட்டை உருவாக்கும்

திறந்து மூடும் கூண்டினுள்ளே
விதவிதமாய் தின்னக் கிடைக்கும்
பறக்க முடியாத கூண்டுப் பறவைக்கு
அது எப்படிச் செரிக்கும்?

கொஞ்சம் கொஞ்சமாய்
வளரும் சிறகின் ஆழத்தில்
பைத்திய வேர் துளிர்க்கும்
வானம் இல்லாமல் பறக்கும்

நகங்களினால் அலகினினால்
கூண்டை மட்டுமல்ல
நம் இரும்பு மனங்களையும்
கிழித்திடத் துடிக்கும்

தன் இறகுகளை பிய்த்து
கடிதங்கள் போடும்
கொண்டுபோகும் காற்றில்
ஈரம் கூடும்...

உருவமில்லா காற்றில் கூட
இதயம் இருக்கிறது
மனித உருவினுள்ளே
இதயம் அல்ல இரும்பே இருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக