அப்பாவின் நினைவு நாள்
எப்போதும் போலவே ஒருநாள்
கண்கள் குளம் ஆகும்
நினைவுகள் மீன்கள் ஆகும்
என்றெல்லாம் கிடையாது
அப்பாவின் நினைவு நாள்
எப்போதும் போலவே ஒருநாள்
இரு கைகளில்
ஆரத் தழுவியதும்
உடல்கள் மறைந்துவிடும்
பின்னர் எப்படி
கண்ணீர் பெருகிவரும்
இரு கரங்களுக்கு இடையில்
ஆரத்தழுவி ஆருயிராய் இருக்கிறார்
தந்தை மறைந்தார் என்பது
பிறர் காணும் உண்மை
பிள்ளைக்கு அது பொய்
பட்டம் விட நினைக்கையில்
பட்டப் பகலில் தூங்கையில்
பச்சைப் பொய் சொல்கையில்
இன்னும் என்னை முறைக்கிறார்
எளிமையைக் காண
அதில் நகைக்கிறார்
ஓயாமல் ஓயாமல்
என்னுள்ளே உழைக்கிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக