என்னைத் தேர்ந்தெடுத்து
எவனோ
எவளோ
எழுதுகிறார்...
முதலில் படிக்கும்
வாய்ப்பு எனக்கு
அவ்வளவுதான்
சில பிடிக்கும்
சில பிடிக்காது
பல பிடிக்கும் பிடிக்காது
ஒரு வரியில் சொல்ல
'வாழ்க்கை போல இருக்கிறது'
என்னைத் தேர்ந்தெடுத்து
எவனோ
எவளோ
எழுதுகிறார்...
கடவுள் கூட
எவனோ
எவளோ
நான் பார்த்ததில்லை
அன்னையும்
தந்தையும்
தவிர
அவனோ
அவளோ
எனக்குப் பெரிது இல்லை
யாராக இருந்தாலும்
சொல்லிவிட்டு போவதில்லை...
அந்த அளவிற்கு தான்
பழக்கம்
பழகாத
தனிமை மட்டும்
கூடவே வருகிறது
நானும்
சொல்லாமல் போகும்வரை
எவனோ
எவளோ
எழுதிவிட்டுப் போகட்டுமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக