ஆம்புலன்ஸ்காக
யாரும் வழிவிடவில்லை
தான் ஆம்புலன்சில் போகக்கூடாது
என்பதற்காகவே
இந்த வழிவிடல்...
ஒரு நதி
நீள வாக்கில்
இரண்டாகப் பிளந்து
ஒரு சிட்டெறும்புக்கு
வழி விடுவது போல்
காட்சி வந்து வந்து மறைகிறது...
விதி வழியில்
ஓடிக்கொண்டிருக்கிறது
பெரும் வாகன நதி...
ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக