கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைப்பதே இல்லை
நீ பூக்காத விழிகளில்...
மனதில் படபடப்பு
சிறகில் தவம்
விழியில் தேடல்
வழியில் வருகிறாயா நீ...
உன்னோடு தான் என் வார்த்தைகள்
உன்னைத் தொடுகிறதா...
இப்படியே என்னைக்
கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்
எங்கிருக்கிறாய் நீ
எஞ்சி நிற்கிறேன் நான்...
கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைக்காமலே இன்னும்
நீ பூக்காத விழிகளில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக