ஒன்பது வினாடிகளில் ஓடியவன்
வென்றவன் என்றால்
ஒன்பது நாட்களாய் ஊர்ந்து வரும்
அவன் யார்?
அடுத்து எட்டு வினாடிகளில் ஓடிட
பயிற்சி எடுப்பவர்களைப் பார்த்து
எப்படி அவன் சலனமில்லாமல்
ரசித்து ரசித்து
தன் வழியில் போகிறான்...
உலகமே கைத்தட்டினாலும்
சகலமும் கைக்கெட்டினாலும்
சலனமே இல்லாதவன்
தன் சங்கைத் தானே ஊதாதவன்
போதிக் கூட்டுக்குள்
நத்தை புத்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக