சவங்கள்
எப்பொழுதும்
மாலைகள் அணிந்து இருப்பதில்லை...
மாலை
அணிந்து இருப்பதெல்லாம்
சவங்கள் இல்லை...
மாலைக்கு
ஒருபோதும் பேதம் இல்லை
யாருக்கும் மணம் வீசும்...
தெருவில் பிய்த்து எறியப்பட்ட
இந்த மலர் மாலைகள் யாருக்காகவோ
தெருவெல்லாம் மணம் தேடி அலைகிறது...
இரத்தம் இல்லாத
அதன் சதைகளை இதழ்களை
மிதித்துக் கடந்துச் செல்கிறோம்...
இருந்தும் மலர்கள் எல்லாம்
நமக்கு மாலையாகிட
மலர்ந்து கொண்டே இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக