மனதின் சுவர்களை
ஊடுருவிப் பார்க்கிறவன்
மரணக் குழியில்
தெரியாமல் விழுந்ததெப்படி?
மரணம் உன்னை அணைத்து இருக்காது
நீதான் அதனை
கட்டித் தழுவி இருப்பாய்
எட்டி இருப்பவரை
கிட்ட இழுக்கும் உன்
கவிதைகளில் ஒன்றை
காலனின் காதுகளில்
நீ சொல்லி இருப்பாய்...
ஃப்ரான்சிஸ் கிருபாவின் கவிதை:
"சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக