செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

 


வானம்
அவள் விரல்களில் புள்ளியாகிறது
மனதில்
மா கோலம் வரைகிறாள்
வானம் புள்ளிகளாகும் தருணங்களில்
திருவிழாவில் தொலைந்துபோன
குழந்தை ஆகிறேன்
விரல் தேடி அலைகிறேன்
அவள் விரல்களில்
என் கன்னத்தை கிள்ளுகிறாள்
இந்தப் புள்ளியை வானமாக்குகிறாள்

வானத்தைப் புள்ளி ஆக்குகிறாள்
புள்ளியை வானம் ஆக்குகிறாள்
ஜகஜாலக்காரி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக