மரங்களில்
இலை கிளை மலர்
காய் கனிகளைப் போல்
பறவையும் பூக்கும் என்று
நம்பி வந்த காலம்
எங்கோ பறந்துவிட்டது
மனதிற்கு
சிறகுகள் முளைத்த பின்பு...
வானம் தான்
வசப்பட மறுக்கிறது
இலைகள் பறந்த
பறவைகள் விழுந்த
அந்த வசந்த காலத்தில்
வானம்
எனக்கு அத்துப்படி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக