செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

 



மரங்களில்
இலை கிளை மலர்
காய் கனிகளைப் போல்
பறவையும் பூக்கும் என்று
நம்பி வந்த காலம்
எங்கோ பறந்துவிட்டது
மனதிற்கு
சிறகுகள் முளைத்த பின்பு...
வானம் தான்
வசப்பட மறுக்கிறது
இலைகள் பறந்த
பறவைகள் விழுந்த
அந்த வசந்த காலத்தில்
வானம்
எனக்கு அத்துப்படி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக