பாதகம் ஏதுமில்லா
சாதகம் ஆனதொரு
போதைக்கு வழியில்லையா
கொண்டாட்டம் வாழ்வில்லையா...
நிலவினில் கால் பதிக்க
அறிவியல் உடனிருக்க
நிழல் அங்கு போய்வரும்
கனவிற்கு துணையில்லையா...
உடல் மனம் கெடுக்கும்
ஊக்கிகள் பலவுண்டு
கள்ளச் சந்தைகள் உண்டு
கலப்படங்கள் உண்டு
நல்ல போதை கொண்டு
நலமுடனும் வாழ்ந்து
கள்ளம் யாவும் மறைய
உள்ளம் தான் துணியாதோ...
பாதகம் ஏதுமில்லா
சாதகம் ஆனதொரு
போதைக்கு வழியில்லையா
கொண்டாட்டம் வாழ்வில்லையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக