கவிதை கண்ணுக்குத் தெரிகிறது
சொற்களால் அதனை மறைத்து விடுகிறேன்
சொற்கள் மட்டும் இல்லையென்றால்
சொர்க்க வாசல் நுழைந்திருப்பேன்
கண்களுக்கு இரண்டு உலகம்
ஒன்று
கண்களுக்குத் தெரிவதும்
இரண்டு
கண்களில் தெரிவதில் தெரிவதும்
இரண்டாம் உலகம்
யாருக்கும் சொந்தமில்லை
அதனால் நெருக்கமாக இருக்கிறது
நெருக்கமாக இருந்தாலும்
கானகத்தில் காணும் இடமெல்லாம்
புத்துயிர்ப்பு, விசித்திரம், இரகசியம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக