ஞாயிறு, 2 மே, 2021

 

கவிதை கண்ணுக்குத் தெரிகிறது
சொற்களால் அதனை மறைத்து விடுகிறேன
சொற்கள் மட்டும் இல்லையென்றால்
சொர்க்க வாசல் நுழைந்திருப்பேன்

கண்களுக்கு இரண்டு உலகம்
ஒன்று
கண்களுக்குத் தெரிவதும்
இரண்டு
கண்களில் தெரிவதில் தெரிவதும்

இரண்டாம் உலகம்
யாருக்கும் சொந்தமில்லை
அதனால் நெருக்கமாக இருக்கிறது

நெருக்கமாக இருந்தாலும்
கானகத்தில் காணும் இடமெல்லாம்
புத்துயிர்ப்பு, விசித்திரம், இரகசியம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக