மீன் ஒன்று
நீரை வெறுத்து
வானில் குதிக்கிறது
நீர் மடியை
விரித்து வைத்து
காத்து இருக்கிறது...
பறவை ஒன்று
வானை வெறுத்து
நீரில் குதிக்கிறது
வான் கரங்கள்
அணைத்துக் கொள்ள
காத்து இருக்கிறது...
நானும்
நினைவை வெறுத்து
கனவில் குதித்தேன்
நினைவின் சிறகுகள்
தூக்கிச் செல்ல
காத்து இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக