தொட்டுப் பழகும் நிலத்தை மறந்து
எட்டி நிற்கும் வானம் ரசிப்பேன்
நிலம் ஈரமாய் இருப்பதற்கு
நானும் ஓர் காரணமோ...
பச்சை நிற தாவணி
என் கண்கள் குளிர
கட்டி வந்தாள்
நீல நிற தாவணியை
நான் காண்பதைக் கண்டு
பெரும் மூச்சிரைத்தாள்
விழி ஈர்ப்பு
எனைப் பிடித்திழுக்க
புவி ஈர்ப்பு விடுவதில்லை
பழி ஏதும் சொல்வதில்லை
பாதச்சுவடுகளை துரத்தவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக