வானம் மேலும் நெருக்கம் ஆகிறது
எனை பெற்றெடுக்காத அன்னை
நான் பெற்ற அன்னை
வானுலகம் சேர்ந்தார்...
நண்பனின் அன்னை
விட்டுப் பிரிந்தார் மண்ணை
திறந்தே வைத்திருந்த அவர் கண்ணை
நாங்கள் பார்க்கிறோம்
அவர் பார்க்கிறாரா தெரியவில்லை...
ஒருவராய் இருந்து வளர்த்தார்
இரு பிள்ளைகள்
அழகழகாய்ச் செய்து விற்று வந்தார்
பொம்மைத் தென்னைகள்
அரி ஓம் ஸ்ரீ நாராயண
எனச் சொல்லியே அலைபேசுவார்
பேசும் வார்த்தைகள் அத்தனையிலும்
நம்பிக்கையை ஊட்டுவார்
தெய்வமே நம்பிக்கையாய்
வாழ்ந்து வந்தார்
தெய்வ நம்பிக்கை இல்லா
எனக்காகவும் அவர் வேண்டி வந்தார்
சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்
நாங்கள் சிரிப்பதற்குப் பேசுவார்
காண வரும்போதெல்லாம்
எப்பொழுதும் புன்னகையே வீசுவார்
வளராத பொம்மைத் தென்னைகளும்
வளர்ந்து நிற்கும் இரு பிள்ளைகளும்
சொல்லில் அடங்காத துயரங்களுடன்
மௌனமாய் அன்னை அவர்களுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக