நான்கைந்து பேர்
நடந்து செல்லும்
சாதாரண வீடல்ல
எங்கள் வீடு
ஆயிரமாயிரம் பேர்கள்
நடந்து செல்லும்
பிரமாண்ட வீடு...
எங்கள் வீட்டில்
ஏராளமான அறைகள் உண்டு
அத்தனையும்
பிறர் வாழ விட்டுவிட்டோம்
பிறை பார்த்துப் பழகிவிட்டோம்
வாடகை கேட்பதில்லை
முன் பணமும் வாங்கவில்லை
அம்பானிக்கு 500 அறையாம்
சிரித்துச் சிரித்து மீளவில்லை
யார் வந்து போனாலும்
எதை எடுத்துக் கொண்டாலும்
கணக்குப் பார்ப்பதில்லை
யாரும் ஓர் தாய்ப் பிள்ளை
காலடிச் சிந்து
காணாமல் போகும்
கண்களும் மெல்ல
துயில் தேடிப் போகும்
சாலையோரம் தான்
எங்கள் சரணாலயம்
திறந்த வீட்டில்
தினம் சூர்யோதயம்...
தெருவோரப் பிள்ளைகள்
தேர் வேண்டாத முல்லைகள்
உலகம் எங்கள் வீடு
உள்ளம் எங்கள் கோயில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக