இரவை வரைய வேண்டும்
அதில் ஒளியும் இருக்க வேண்டும்
ஓவியனின் சங்கடமோ
அவன் பகல் பொழுதில்
படர்ந்திருந்த இருள்...
அழகு ஓவியங்கள் பின்னால்
அலங்கோலமாய் ஓவியன்
இருளுக்கு ஒளி கொடுத்து
இருளிலேயே கிடக்கிறான்
இருந்தும்
அசிங்கமான இந்த சமூகத்தை
அழகு படுத்தவே நினைக்கிறான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக