வீழ்ந்தாலும் எழும்
மழைத்துளி போல்
இந்த மனம் மாறக்கூடாதா...
கனம் தோறும்
வீசும் குளிர் காற்றில்
இதய எரிமலை ஆறாதா...
இந்த மூங்கில்
உள் நுழைந்து
இசை ஆடை பூணாதா...
மௌனக் கடிதம்
எழுதி வைத்தேன்
உன் விரல் திறவாதா...
விடியல் வந்து
எழுப்பும் இரவு
பகலில் பாயை விரிக்காதா...
தூக்கம் இழந்து
திரியும் எனக்கு
தூங்க மடியாய் மாறாதா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக