சேரியில் வாழ
ஊரில் இல்லை
தலைவன்
சேற்றினிலும்
எந்தத் தாமரையும்
புதிதாய் பூப்பதில்லை
ஏட்டினிலே கூட
நாட்டின் துயர்
கதையாவதில்லை
ஆண்டுகள்
பல ஆகியும்
நாற்காலியில் நல்லவரில்லை...
சேரிகளில் தலைவர்கள் வாழட்டும்
புது அரசியல் சிந்தனை தழைக்கட்டும்
ரேஷன் மேம்படும்
தீ விபத்துகள் பயப்படும்
சாக்கடைகள் பயன்பெறும்
கல்வி, சாலைகள் நடை பெறும்
ராணுவத்தில் கட்டாயம்
ஒரு குடும்ப உறுப்பினர்
நூறுநாள் நூறு துறையில்
கட்டாயம் கடைநிலை வேலை
அரசியல்வாதிகளுக்கு அனுபவம் தேவை
நாட்டின்
கடைசி குடிசை
கடைசி உறக்கம்
கடைசி பசி
கடைசி ஊதியம்
கடைசி பேருந்து இருக்கை
முதல் விழிப்பு
முதல் திரையரங்கு இருக்கை
முதல் தடுப்பூசி
பொதுக் கழிப்பிடம்
பொதுக் குளிப்பிடம்
பொதுக் கல்லறை
அரசுப் பள்ளிக்கூடம்
அரசு மருத்துவமனை
அரசு போக்குவரத்து
அரசு மதுபானம்
கார்ப்பரேஷன் குடிநீர்
அடிபம்பில் பிறநீர்
தலைவர்களுடையது ஆகட்டும்
தியாகிகளை உருவாக்க
சட்டம் வேண்டும்
அரசு ஊழியர்கள் அதில்
முதல் பயனுற வேண்டும்
இனி வரும் காலம்
பெரும்பான்மையினரது அரசாகட்டும்
இதை இனிது உவப்பவரே
நம்மை ஆளட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக