கண் மூட
என் வானம்
திறக்கிறது
நிலவொன்று
வெகு நாளாய்
வர மறுக்கிறது
வழியில்லை
விழி உன்னை
வரைகிறது
திறவாத
கண் ஏனோ
வலிக்கிறது
அதை உணர்கின்ற
உள் வானம்
அழுகிறது
வரைந்த ஓவியத்தை
சில துளிகள்
அழிக்கிறது
வான் விட்டு
சில துளிகள்
விழுகிறது
என் துளிகள்
விரட்டி அதைப்
பிடிக்கிறது
வெளி வானில்
ஒரு வெண்ணிலவு
சிரிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக