வெள்ளி, 11 டிசம்பர், 2020

 



கண் மூட
என் வானம்
திறக்கிறது

நிலவொன்று
வெகு நாளாய்
வர மறுக்கிறது

வழியில்லை
விழி உன்னை
வரைகிறது

திறவாத
கண் ஏனோ
வலிக்கிறது

அதை உணர்கின்ற
உள் வானம்
அழுகிறது

வரைந்த ஓவியத்தை
சில துளிகள்
அழிக்கிறது

வான் விட்டு
சில துளிகள்
விழுகிறது

என் துளிகள்
விரட்டி அதைப்
பிடிக்கிறது

வெளி வானில்
ஒரு வெண்ணிலவு
சிரிக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக