ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

Quaden Bayles

உருவக் கூட்டையே
தானாய் நினைந்து
சிறகுகள் மறந்து
உலவிடும் பருந்து

உருவம் தாண்ட முடியாதவர்கள்
உன் உருவை கேலி செய்கிறார்கள்
உடல் கூட்டை விட்டு நீ
பறந்து வா மகனே
சிறை விட்டுப் பிரிந்த
அருவம் தான் சிவனே...
மற்றெல்லாம் வெறும்
என்புதோல் போர்த்திய
பரிதாப ஜீவனே

உன் இதயக் கண்களை
திறந்து வை
இந்த இதயம் இல்லாதவர்களுக்காகவும்
அது துடிக்கட்டும்...

9 வயதோ 18 வயதோ
உண்மையோ நாடகமோ
ஏன் இந்த ஏளனம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக