உருவக் கூட்டையே
தானாய் நினைந்து
சிறகுகள் மறந்து
உலவிடும் பருந்து
உருவம் தாண்ட முடியாதவர்கள்
உன் உருவை கேலி செய்கிறார்கள்
உடல் கூட்டை விட்டு நீ
பறந்து வா மகனே
சிறை விட்டுப் பிரிந்த
அருவம் தான் சிவனே...
மற்றெல்லாம் வெறும்
என்புதோல் போர்த்திய
பரிதாப ஜீவனே
உன் இதயக் கண்களை
திறந்து வை
இந்த இதயம் இல்லாதவர்களுக்காகவும்
அது துடிக்கட்டும்...
9 வயதோ 18 வயதோ
உண்மையோ நாடகமோ
ஏன் இந்த ஏளனம்?
தானாய் நினைந்து
சிறகுகள் மறந்து
உலவிடும் பருந்து
உருவம் தாண்ட முடியாதவர்கள்
உன் உருவை கேலி செய்கிறார்கள்
உடல் கூட்டை விட்டு நீ
பறந்து வா மகனே
சிறை விட்டுப் பிரிந்த
அருவம் தான் சிவனே...
மற்றெல்லாம் வெறும்
என்புதோல் போர்த்திய
பரிதாப ஜீவனே
உன் இதயக் கண்களை
திறந்து வை
இந்த இதயம் இல்லாதவர்களுக்காகவும்
அது துடிக்கட்டும்...
9 வயதோ 18 வயதோ
உண்மையோ நாடகமோ
ஏன் இந்த ஏளனம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக