வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

உனது விழிகளை மட்டும் தான்
வெகு இயல்பாக படிக்க முடிகிறது
எனக்கு மட்டுமான தாய் மொழி
என்றும் மாறாத மழலை மொழி
இரு இமை உதடுகளால்
என்னைக் கிள்ளிக் கொஞ்சும் மொழி

கண் சிமிட்டளில் மௌனமாக
மின்னல் அஞ்சல் போடும் விழி
அக விளக்கை தூண்டும் மொழி
இதயம் தனியாக படிக்குதடி
அதனால் தான்
இடைவிடாமல் துடிக்குதடி...

வான் கடலில்
ஒற்றை விண்மீன் கண்
உன் தூது வார்த்தைகளைத்
தூவிக் கொண்டிருக்கிறது
நான் நனைந்து கொண்டிருக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக