புதன், 26 பிப்ரவரி, 2020

இயேசு இயற்கையைத் தொடர்கிறார்
ஆடுகளும் இயற்கையைத் தொடர்கிறது
மனிதர்கள் நாம் தான்
இயேசுவை பின் தொடர்ந்து
இயற்கையை மறந்துவிட்டோம்
முற்றிலுமாய் அழித்துவிட்டோம்

மனிதனின்
காலடிகள் மட்டும்தான்
காடுகளை அழிக்கின்றன

கடவுளின் காலடிகளும்
ஆடுகளின் காலடிகளும்
அப்படிச் செய்வதே இல்லை

உலகம் ஒரு உருண்டை
சுற்றி வந்த
கடவுளும் ஆடுகளும்
இயற்கையை தேடின
போகும் போது இருந்தவை
இப்போது இல்லை

கடவுளும் ஆடுகளும்
திரும்பிப் பார்க்கின்றனர்
மனிதர்கள்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்

கடவுள்
மீண்டும் மீண்டும் இயற்கையை
படைத்துக் கொண்டே இருக்கிறார்
மனிதர்கள்
மீண்டும் மீண்டும்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்

மனிதர்கள் இப்படித்தான்
கடவுளை சிலுவையில் அறைகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக