இயேசு இயற்கையைத் தொடர்கிறார்
ஆடுகளும் இயற்கையைத் தொடர்கிறது
மனிதர்கள் நாம் தான்
இயேசுவை பின் தொடர்ந்து
இயற்கையை மறந்துவிட்டோம்
முற்றிலுமாய் அழித்துவிட்டோம்
மனிதனின்
காலடிகள் மட்டும்தான்
காடுகளை அழிக்கின்றன
கடவுளின் காலடிகளும்
ஆடுகளின் காலடிகளும்
அப்படிச் செய்வதே இல்லை
உலகம் ஒரு உருண்டை
சுற்றி வந்த
கடவுளும் ஆடுகளும்
இயற்கையை தேடின
போகும் போது இருந்தவை
இப்போது இல்லை
கடவுளும் ஆடுகளும்
திரும்பிப் பார்க்கின்றனர்
மனிதர்கள்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்
கடவுள்
மீண்டும் மீண்டும் இயற்கையை
படைத்துக் கொண்டே இருக்கிறார்
மனிதர்கள்
மீண்டும் மீண்டும்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்
மனிதர்கள் இப்படித்தான்
கடவுளை சிலுவையில் அறைகிறார்கள்
ஆடுகளும் இயற்கையைத் தொடர்கிறது
மனிதர்கள் நாம் தான்
இயேசுவை பின் தொடர்ந்து
இயற்கையை மறந்துவிட்டோம்
முற்றிலுமாய் அழித்துவிட்டோம்
மனிதனின்
காலடிகள் மட்டும்தான்
காடுகளை அழிக்கின்றன
கடவுளின் காலடிகளும்
ஆடுகளின் காலடிகளும்
அப்படிச் செய்வதே இல்லை
உலகம் ஒரு உருண்டை
சுற்றி வந்த
கடவுளும் ஆடுகளும்
இயற்கையை தேடின
போகும் போது இருந்தவை
இப்போது இல்லை
கடவுளும் ஆடுகளும்
திரும்பிப் பார்க்கின்றனர்
மனிதர்கள்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்
கடவுள்
மீண்டும் மீண்டும் இயற்கையை
படைத்துக் கொண்டே இருக்கிறார்
மனிதர்கள்
மீண்டும் மீண்டும்
பாவமன்னிப்பு கேட்கின்றனர்
மனிதர்கள் இப்படித்தான்
கடவுளை சிலுவையில் அறைகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக