காதல் எனும் கயிறு கட்டி
பட்டம் என்னைப் பறக்க வைத்தாள்
மழையிலும் பறந்த பட்டம் இன்று
நீ இல்லாமல் ஏனோ நனையுதடி
பிடித்து இருந்த விரல்கள் தான்
பிடிக்காமல் விலகிப் போனதோ
காற்றில் வீசி எறிந்து விட்டு
கண் மறைந்து போனதோ
இலக்கு இன்றி தலை கிறங்கி
தரை இறங்கி வீழ்கிறேன்
முள் மரத்தின் முத்தம் ஒன்றில்
கண் விழித்துப் பார்க்கிறேன்
உடல் சிதைந்து போனது
மனம் வதைந்து போனது
உன் நினைவுகள் மட்டும்
போக மறுக்கிறது
வானில் பறந்துத் திரிந்த தடங்களை
காற்று மெல்ல மெல்ல அழிக்கிறது
பார்த்துத் துடிக்கும் இந்த பட்டத்தையும்
இதய வடிவில் கிழிக்கிறது
இதயம் மட்டும் பறக்கிறது
உன் விரல்கள் தேடி அலைகிறது...