செவ்வாய், 29 ஜனவரி, 2019

அணைதனை மீறிடும் வெள்ளம் போல
இமைகளைக் கடந்திடும் கண்ணீர்


நான்குகடல் சூழ்ந்தன
நடுவினில் தனியென
வலியினில் புழுவென
நரம்புகள் துடித்தன


நீங்காத கூந்தல் வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்


யாரும் கேட்காத
ஊமை மொழி
நான் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே
என்னை அழி


உன்
விரல்களை இதழ்களை
பிரிந்திருக்க முடியவில்லை


புவி ஈர்ப்புவிசை தளர்ந்து
உடற்க்கூட்டை உள்ளம் பிரிந்து
தேடி அலைகிறது உன்னை
விரைவில் சேர்ந்துவிடு என்னை






    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக