அணைதனை மீறிடும் வெள்ளம் போல
இமைகளைக் கடந்திடும் கண்ணீர்
நான்குகடல் சூழ்ந்தன
நடுவினில் தனியென
வலியினில் புழுவென
நரம்புகள் துடித்தன
நீங்காத கூந்தல் வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
நான் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே
என்னை அழி
உன்
விரல்களை இதழ்களை
பிரிந்திருக்க முடியவில்லை
புவி ஈர்ப்புவிசை தளர்ந்து
உடற்க்கூட்டை உள்ளம் பிரிந்து
தேடி அலைகிறது உன்னை
விரைவில் சேர்ந்துவிடு என்னை
இமைகளைக் கடந்திடும் கண்ணீர்
நான்குகடல் சூழ்ந்தன
நடுவினில் தனியென
வலியினில் புழுவென
நரம்புகள் துடித்தன
நீங்காத கூந்தல் வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
நான் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே
என்னை அழி
உன்
விரல்களை இதழ்களை
பிரிந்திருக்க முடியவில்லை
புவி ஈர்ப்புவிசை தளர்ந்து
உடற்க்கூட்டை உள்ளம் பிரிந்து
தேடி அலைகிறது உன்னை
விரைவில் சேர்ந்துவிடு என்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக