அவளின்
மந்திரப்புன்னகை
காயம் ஆற்றும்
காதல் கூட்டும்
மண்ணிலிருந்து
என்னை
மெல்ல தூக்கும்
தாபங்கள் ஊட்டும்
தாகங்கள் தீர்க்கும்
நெஞ்சுக்குள்
வானவில் வந்து
பூக்கும்
மேனி சிலிர்க்கும்
சிறகுகள் முளைக்கும்
காதினில்
இன்ப கீதங்கள்
சுரக்கும்
கண்கள் குளிரும்
ஆனந்தக்
கண்ணீர் நிறையும்
மனம்
பரிசல் ஏறி
பயணம் தொடரும்
கதவுகள் திறக்கும்
கனவுகள் பிறக்கும்
கற்பனை வில்லினில்
கவிதைகள்
தொடுக்கும்
இந்த
மந்திரப் புன்னகை தான்
என்னை
விட்டு விலகிவிட்டாள்
கொட்டும் மழை
நின்றதுபோல்
நிசப்தத்தில்
ஆழ்த்திவிட்டாள்...
மந்திரப்புன்னகை
காயம் ஆற்றும்
காதல் கூட்டும்
மண்ணிலிருந்து
என்னை
மெல்ல தூக்கும்
தாபங்கள் ஊட்டும்
தாகங்கள் தீர்க்கும்
நெஞ்சுக்குள்
வானவில் வந்து
பூக்கும்
மேனி சிலிர்க்கும்
சிறகுகள் முளைக்கும்
காதினில்
இன்ப கீதங்கள்
சுரக்கும்
கண்கள் குளிரும்
ஆனந்தக்
கண்ணீர் நிறையும்
மனம்
பரிசல் ஏறி
பயணம் தொடரும்
கதவுகள் திறக்கும்
கனவுகள் பிறக்கும்
கற்பனை வில்லினில்
கவிதைகள்
தொடுக்கும்
இந்த
மந்திரப் புன்னகை தான்
என்னை
விட்டு விலகிவிட்டாள்
கொட்டும் மழை
நின்றதுபோல்
நிசப்தத்தில்
ஆழ்த்திவிட்டாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக