வெள்ளி, 11 ஜனவரி, 2019

நீ
காத்திருந்த இடங்களை
கால்கள் கடக்க முடியவில்லை
உலகம் மறந்து நிற்கிறேன்
உன் நினைவால்
மண்ணை நனைக்கிறேன்

உனை
கடந்து போவது
மேகங்கள் இல்லை
என் நெஞ்சத்தின்
வலிப் புகைகள்

கானலாய்
உன் நினைவுகளை
பருகப் பருக
இதயத்தின் தாகம்
தீர்வதேயில்லை


கண்ணீர் குளத்தில்
கனவு குமிழ்கள்
உடைய உடைய
குளம்
நிறைந்து கொண்டேயிருக்கிறது

உனது
நினைவுச் சரணாலயத்தில்
காத்திருக்கிறேன்
காற்றில்லாமல்
மூச்சுத்திணறுவது போல்
நீ இல்லாமல் தவிக்கிறேன்
கல்லறையாகும் முன்
வந்துவிடு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக