புதன், 23 ஜனவரி, 2019

சர்க்கரையால் உன் பெயரெழுதிப் பார்த்திருந்தேன் இனிதாக
சீண்டிய சிற்றெறும்பு எல்லாம்
சிறகுகள் முளைத்துச்
சிட்டுக்குருவிகளாய்
வட்டம் அடிக்கின்றது என்னை


அறிந்ததிலிருந்து அறியாததற்க்குப் பயணம்
ஒவ்வொரு நொடியும் புதுமை ஆகிறாள்


இறந்த காலங்களை அழித்துக்கொண்டே
என்னில்  நிகழ்காலம் தீட்டுகின்றாள் 


ஓவியம் வரைந்துவிட்டு
ஓடி ஒளிந்துக் கொண்டாள்
கண்கள் வர மறுத்தாள்
கண்ணீர்க் குடம் நிறைத்தாள்


என்னையிழந்த தூக்கம் தந்த
உன் மடிதான் கிடைத்திடுமா
அந்த நிம்மதிதான் திரும்பிடுமா...


உன் புருவ மத்தியின் புதைக்குழிக்குள்
என்னைப் புதையல் ஆக்கிவிடு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக