திங்கள், 21 ஜனவரி, 2019

நெஞ்சம் நிறைந்தவளே
உன் பிரிவால்
என் மஞ்சம் நனையுதடி

உள்ளம் உருகுதடி
உடல் யாவும் எரியுதடி

ஓராயிரம் கோடி முறை
உன் பெயர்ச் சொல்லி ஓயவில்லை
ஈராயிரம் கோடித் துளி
கண்ணீர்ப் பெருகுதடி

உள்ளம் கிறுக்குதடி
எனக்குள்ளே உன் பெயர் செதுக்குதடி
மண்டைக் குடையுதடி
உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்குதடி


எரிமலைக் குழம்பெனவே
நெஞ்சுக்குள் வேதனைப் பொங்குதடி
காலத்தால் பசுமை பூக்குமடி
உனை என்னிடம் சேர்க்குமடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக