சித்தம் நன்றாக கலங்கி விட்டது
பார்ப்பவை எல்லாமே அழகாகத் தெரிகிறது
நல்லது கெட்டது இல்லாத ஒரு உலகம்
அவன் கண்முன் விரிகிறது...
எச்சரிக்கையாக இருங்கள்
அவன் எது சொன்னாலும் பலிக்கும்
ஊரே கூடி சிரிக்கும் என்றாலும்
எல்லாமே அவன் இஷ்டப்படி தான் நடக்கும்...
நீ ஆட்டோகிராப் கேட்டு நிற்கும்
நட்சத்திரம் போலில்லை
போலியும் இல்லை
இவன் விசித்திரம்
எந்த மகாக் கலைஞனும்
வரைய இயலாத ஓவியம்
நம் எல்லைக்குள்
நம்மை இருக்கச் செய்யும்
ஆண்டவன்... எழுத்தை ஆண்டவன்
திரு நெல் வேலி
சென்னை உப்பு வேலி
இடையில் வாழ்ந்தாலும்
பிரபஞ்சம் எங்கும் பறந்து திரிந்த
பறவைகள் இரண்டு
ஒன்று கவிச் சித்தன்
எங்கள் பா ரதி
இவன் கதைச் சித்தன்
எங்கள் புதுமைப்பித்தன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக